;
Athirady Tamil News

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது சரமாரியான தாக்குதல் : பலர் காயம்

0

ஈராக்கில்(iraq) உள்ள அமெரிக்க(us) படைத் தளம் மீது ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்-அசாத் முகாமை இலக்கு வைத்து பல ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது
இந்த தாக்குதலில் ஐந்து அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொயிட் ஒஸ்டின்(Lloyd Austin) கூறுகையில், தனது படை வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றார்.

விசாரணைகள் ஆரம்பம்
ஏவுவதற்கு தயாராக இருந்த 8 ரொக்கெட்டுகளுடன் கூடிய ட்ரக் வண்டியொன்று தமது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இராணுவ தளத்தை தாக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.