;
Athirady Tamil News

பங்களாதேஷுக்கு இந்திய மீட்பு விமானங்கள் – முக்கிய தலைவர்கள் உட்பட பலர் கொடுர கொலை

0

பங்களாதேஷ் (bangladesh) நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், டெல்லி (Delhi) – டாக்கா இடையே ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ ஆகியவை இயக்க ஆரம்பித்துள்ளாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று காலை விமான சேவை இரத்து செய்யப்பட்ட நிலையில், மாலை நேர விமானத்தை ஏர் இந்தியா (Air India) இயக்கியிருந்தது.

இதேவேளை, சென்னையில் (chennai) இருந்து பங்களாதேஷுக்கு இன்று மீண்டும் விமான சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பங்களாதேஷுக்கு இன்று முதல் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறை வெறியாட்டம்
பங்களாதேஷ் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டம் முடிந்தபாடில்லை.

அங்கிருக்கும் மத சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பங்களாதேஷ் வன்முறைக்கு இதுவரை 440 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

பங்களாதேஷில் இருந்த ஏராளமான இந்து கோயில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்து மக்கள் வாழும் வீடுகள், தொழிற்சாலைகள் சேதப்படுத்தப்பட்டன.

சிறப்பு விமானம்
அது மட்டுமல்லாமல், ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த இரண்டு இந்து மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு கடந்த இரண்டு நாட்களில் மட்டும், அவாமி லீக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 29 உடல்களை, பங்களாதேஷ் அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டாக்காவிலிருந்து 6 குழந்தைகள் உள்பட 205 பேர் இந்தியா அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

செவ்வாயக்கிழமை புது டில்லியிலிருந்து டாக்காவுக்குச் சென்ற சிறப்பு விமானம், அங்கிருந்து 205 பேரை பத்திரமாக தாயகம் அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.