;
Athirady Tamil News

மத்திய கிழக்கு பகுதிக்கு விரையும் பிரித்தானிய போர்க்கப்பல்களும் ஹெலிகொப்டர்களும்

0

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, லெபனானில் வாழும் பிரித்தானியர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்காக பிரித்தானிய போர்க்கப்பல்களும் ஹெலிகொப்டர்களும் அப்பகுதிக்கு விரைந்துள்ளன.

தயார் நிலையில் ராணுவம்
லெபனானில் வாழும் பிரித்தானியர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்காக பிரித்தானிய போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்துள்ளன. ஹெலிகொப்டர்களும் தயாராகிவருகின்றன.

அத்துடன், மத்திய கிழக்கு பகுதியில், பிரித்தானிய ராணுவத்தினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, லெபனானிலிருக்கும் பிரித்தானியர்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

லெபானின் வாழும் பிரித்தானியர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 3,000 பேர் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளார்கள்.

ஆனால், மேலும் பல்லாயிரம் பிரித்தானியர்கள் லெபனானில் இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் நம்புகிறது.

விடயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் லெபனானுக்கு சுற்றுலா சென்றவர்கள் அல்ல, அவர்களில் பெரும்பாலானோர் நீண்ட காலமாக லெபனான் நாட்டில் வாழ்ந்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.