;
Athirady Tamil News

யாழில் கடைக்கு முன்நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல்

0

யாழ்ப்பாணம் (jaffna) – அராலி பகுதியில் கடைக்கு முன்னால் நின்ற இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவமானது நேற்றிரவு (8.8.2024) யாழ். அராலி -ஆலடி சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடை ஒன்றின் முன்னால் நின்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

குறித்த குழுவுக்கும் அவ்விடத்தில் நின்ற இளைஞர்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், தாக்குதல்களுக்கு உள்ளாகியவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பின்னர் தாக்குதலுக்கு உள்ளான நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.