;
Athirady Tamil News

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச : மகிந்த வெளியிட்ட அறிவிப்பு

0

தேசத்தை வழிநடத்தும் இளைஞனை விரும்பும் ‘அறகலய’ செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை(namal rajapaksa) ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச,

நாமல் ராஜபக்ச இளம் தலைவர்
தேசத்தின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு இளம் தலைவர் தேவை.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அத்தகைய இளம் தலைவர் என அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இளைஞர்களின் ஆதரவைப் பெற்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கட்சியை விட்டு வெளியேறியவர்களுக்கு அழைப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட்டு வெளியேறிய சில உறுப்பினர்கள் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும், அவர்களை கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.