;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்திற்கு 15 இலட்ச ரூபாய் பெறுமதியான தேக்கமரத்தினை கடத்தி வந்த இருவர் கைது

0

யாழ்ப்பாணத்திற்கு டிப்பர் வாகனத்தில் கற்களுக்குள் தேக்க மரத்தினை கடத்தி சென்ற இருவரை கொடிகாம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாகனத்தினுள் இருந்து 24 தேக்க மர குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 15 இலட்ச ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடிகாம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் பயணித்த டிப்பர் வாகனத்தினை மீசாலை பகுதியில் பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன் போது டிப்பர் வாகனத்தினுள் கற்குவியல்களுக்கு மத்தியில் தேக்க மரங்களை மறைத்து கடத்தி செல்லப்படுவதனை பொலிஸார் கண்டறிந்ததை அடுத்து வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் மறித்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸார் , டிப்பர் வாகனத்தினையும் மீட்கப்பட்ட தேக்க மரக்குற்றிகளையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.