;
Athirady Tamil News

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த லொறி

0

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08) இரவு இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து அப்புத்தளை வர்த்தக நிலையங்களுக்கு அரிசி மூடைகளை இறக்கிவிட்டு அட்டன் நோக்கிப் பயணித்த லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து அப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான பகுதி வீதியானது செங்குத்தான மற்றும் வளைவுகள் கொண்ட பகுதி என்பதால் இந்த இடத்தில் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.