;
Athirady Tamil News

வவுனியாவில் ஓ.எம்.பி அலுவலக பெயர்ப்பலகைக்கு தக்காளி தாக்குதல் நடத்தி கவனயீர்ப்பு போராட்டம்

0

வவுனியாவில் (Vavuniya) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கொட்டகைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) பெயர்ப்பலகை பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றினை காட்சிப்படுத்தியதோடு அதற்கு தக்காளிப் பழத்தினால் எறிந்து குறித்த அலுவலகத்திற்கு தமது எதிர்ப்பினையும் தெரிவித்திருந்தனர்.

பதாகைகளைத் தாங்கியவாறு போராடினர்
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தி இருந்தனர்.

அத்துடன் ”நாங்கள் இரண்டு இலட்சம் லஞ்சம் கேட்கவில்லை எங்கள் குழந்தைகள் எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கூறுங்கள், இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதியை கேட்கிறோம்” என்ற வாசகங்களையும் குறித்த பதாகையில் குறிப்பிட்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.