;
Athirady Tamil News

நாட்டில் மீண்டும் முட்டை இறக்குமதி

0

எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாட்டில் முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரம்
தற்போது, உள்ளுர் சந்தையில் முட்டை ஒன்று 50 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதால், முட்டை இறக்குமதிக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, மாதம் ஒன்றுக்கு 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.