;
Athirady Tamil News

பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்காக தராதர பத்திரம் வழங்கும் நிகழ்வு

0

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்று வெற்றிகரமாக கற்கை நெறியை பூர்த்தி செய்த 237 ஆசிரியர்களுக்கான பயீட்டப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் வழங்கும் நிகழ்வு 10.08.2024 சனிக்கிழமை இரண்டு அமர்வுகளாக கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தி. யோன் குயின்ரஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்

முன்னாள் அதிபர்களான வே. கா கணபதிப்பிள்ளை வீ. கருணலிங்கம் , யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க. தேவராஜா உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.