;
Athirady Tamil News

யாழில் தொடருந்துகளில் இருந்து களவாடப்பட்ட எரிபொருள்: ஆரம்பமாகும் விசாரணை

0

யாழ். காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் (Kankesanturai) நிறுத்திவைக்கப்பட்டுள்ள தொடருந்துகளில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் இரவு வேளையில் தொடருந்துகள் தரித்து நின்றபோது கடந்த ஒன்பதாம் திகதி அடையாளம் தெரியாத குழுவொன்று திருட்டில் ஈடுபட்ட வேளை, நிலையத்தில் பாதுகாப்பு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்ற நிலையில் நான்கு 20 லீட்டர் கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டவாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் விசாரணை
தொடருந்துகளின் எரிபொருள் தாங்கியின் திறப்புக்கள் அனுராதபுரத்திலேயே (Anuradhapura) இருப்பதாக கூறப்படும் நிலையில் குறித்த திருட்டுக்கு தொடருந்து நிலைய ஊழியர்களும் உடந்தையாக செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில்,தொடர்ச்சியாக எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருள் திருடப்பட்டு வந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் தொடருந்து திணைக்களத்தினர் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.