;
Athirady Tamil News

வீடு வீடாகச் சென்று கைது செய்யும் பொலிசார்- Far-Rightஇன் கொட்டத்தை அடியோடு அடக்கத் திட்டம் !

0

லண்டனிலும் மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடத்துகிறோம் என்ற போர்வையில் பெரும் கலவரத்தில் ஈடு பட்ட Far-Right உறுப்பினர்களை, பொலிசார் வைச்சு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். பலரின் வீட்டுக் கதவை உடைத்து, உள்ளே அதிரடியாகச் சென்று அவர்களை கைதுசெய்துள்ளார்கள். இதில் 12 வயதுச் சிறுவன் மற்றும் 17 வயதுச் சிறவன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது பொலிஸ்.

இவர்களும் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தெருக்களில் உள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ள பரலது முகங்களை அடையாளம் கண்டு பிடித்து பொலிசார் கைதுசெய்து வரும் நிலையில். இதுவரை சுமார் 100 பேருக்கு மேல் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழுவின் மிக முக்கியமான பல புள்ளிகளை கைதுசெய்துள்ள பிரிட்டிஷ் பொலிசார், மேலும் பலரை தேடிவருகிறார்கள். சிலர் தலைமறைவாகியும் உள்ளார்கள். இளைஞர்களை உசுப்பேத்தி தூண்டி விட்டு, பெரும் கலவரத்தை உருவாக்கி. கடைகளை சூறையாடி இவர்கள் செய்த நாச வேலை எண்ணில் அடங்காதவை. தற்போது போராட்டம் கலைந்து விட்டது. அனைவரும் அவர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்ட நிலையில். அடாவடியில் ஈடுபட்ட நபர்களை பொலிசார் தேடித் தேடி கைதுசெய்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.