;
Athirady Tamil News

சட்டவிரோதமான 200 கலால் உரிமங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடு

0

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்டவிரோதமான முறையில் 200 கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே முறைப்பாட்டை இலங்கை மதுபான உரிமைதாரர் சங்கம் நேற்று (12) தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்
முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை மதுபான உரிமைதாரர் சங்கத்தின் உப தலைவர் பிரசன்ன விதானகே (Prasanna Vithanage), “தற்போதைய ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ள நிலையில், கலால் திணைக்களத்தின் தலைவராகவும் அவரே உள்ளார்.

கலால் திணைக்களம் தற்போது 200க்கும் மேற்பட்ட புதிய கலால் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், முந்தைய திகதியிட்டு சுமார் 6 புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.