;
Athirady Tamil News

மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரணம்: நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

0

மன்னார்(Mannar) வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஜனநாயகப் போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டமானது, இன்று(13) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் , “மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கவனயீர்ப்பு போராட்டம்
தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகிறோம். ஆகவே வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.

எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவிற்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அனைத்து தரப்பினரையும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.