;
Athirady Tamil News

மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை… நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!

0

கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி, வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த மருத்துவ மாணவி, 4 ஆவது மாடியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்கத்தில் பதாகைகளை ஏந்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் உள்ள ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப்பல்கலைக்கழகம் முன் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.சண்டிகரிலும் மருத்துவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.