;
Athirady Tamil News

குழந்தை செய்வதை அப்படியே பிரதிபலிக்கும் பறவை… வியப்பூட்டும் காட்சி!

0

குழந்தையை மகிழ்ச்சிப்படுத்த குழந்தை செய்வதை அப்படிய திரும்ப செய்யும் பறவையின் நெகிழ்ச்சியான செயல் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் செய்யும் குறும்புச் செயல்களை பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் மனம் தானாகவே குதூகலமாகிவிடும்.

குழந்தைகள் காட்டும் அன்பு தாய் பால் போன்று தூய்மையானது. அந்த அன்பில் எந்த நோக்கமும் இருப்பதில்லை. புலியையும் பூனையையும் குழந்தைகளின் மனநிலை ஒரே மாதிரியாகத்தான் பார்க்கும்.

ஆனாலும் அந்த குழந்தை மனதை சில மனித மிருகங்கள் தவறாக பயன்படுத்துமே தவிர மிருகங்களும் பறவைகளும் அது குழந்தை என்பதை பல சமயங்களில் அழகாக புரிந்துக்கொள்கின்றன.

அதை பறைசாற்றும் வகையில் குழந்தையை மகிழ்விக்க குழந்தை காட்டும் அசைவுகளை அப்பயே பிரதிபலிக்கும் ஒரு பறவையின் வியப்பூட்டும் செயல் அடங்கிய காணொளியொன்று இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.