;
Athirady Tamil News

30 ரூபாய்க்காக நண்பருடன் தகராறு! அடுத்து நிகழ்ந்த விபரீதம்..அதிர்ச்சி சம்பவம்

0

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் நண்பரை கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் சைஃப் ஜாஹித் அலி மற்றும் சக்கன் அலி.

இவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு குடிபெயர்ந்து, அங்கு ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு இருவரும் ஆட்டோ ஒன்றில் பயணித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து , ரூ.30 கட்டணம் செலுத்துவது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஜாஹித் அலி நண்பர் சக்கன் அலியை தாக்கியதில், அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜாஹித் அலி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைகலப்பு வன்முறையாக மாறியதில் இந்த கொலை நடந்ததாக மும்பை குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.