;
Athirady Tamil News

20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இதுவரை தமது வருடாந்த சொத்து விபரங்களை முன்வைக்கவில்லை என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இதற்கு முன்னர் 3 தடவைகள் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சொத்து விபரங்களை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதனை பின்பற்றாத எம்,பிக்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் புதிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சொத்து விபரங்கள் குறித்து அறிவிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.