;
Athirady Tamil News

யாழ் . சேந்தாங்குளத்தில் மோதல் – வாடிகள் , படகுகளுக்கு தீ வைப்பு

0

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .

சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து , கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

அதில் வாடிகள் சில எரிந்த நிலையில் , மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளது.

படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து , ஊரவர்கள் ஒன்று கூடி , தீயினை அனைத்ததுடன் , சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர்

மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தப்பி சென்றுள்ள நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.