;
Athirady Tamil News

நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம்: எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

கடந்த காலத்தில் வரிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, தனிநபர் வருமான வரி அளவை 500,000 ரூபாவிலிருந்து 720,000 ரூபாவாக திருத்துவதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) முன்மொழிந்துள்ளது.

இந்த வருடத்தின் வரி வருமானம் வெளிப்படுத்திய வலுவான செயல்திறன் காரணமாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருத்தங்கள்
இதேவேளை, முன்மொழிவுகளுக்கான திருத்தங்களை சர்வதேச நாணய நிதியம் சமர்பித்துள்ளது.

அதில், குறைந்த வரி வரம்புகளை சேர்ந்தவர்களுக்கு அதிக நிவாரணம் அளிப்பது, நடுத்தர மக்களுக்கு இதேபோன்ற நிவாரணம் வழங்குவது மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு சற்று குறைவான நிவாரணம் வழங்குவது மற்றும் இந்த முன்மொழிவின் சாரத்தை மாற்றாமல் வைத்திருப்பது ஆகியவை அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.