;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் எட்டு முறை கத்திக்குத்துக்கு இலக்கான 11 வயது சிறுமி

0

பிரித்தானியாவில் (United Kingdom) சுற்றுலா பயணியாக சென்றிருந்த அவுஸ்திரேலியாவை (Australia) சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் 8 முறை கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் லெய்செஸ்டர் சதுக்கம் (Leicester Square) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமி, அவரது தாயாருடன் இருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அறுவை சிகிச்சை
இந்த தாக்குதலில், சிறுமிக்கு முகம், தோள்பட்டை, கழுத்து பகுதி ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய ஐயோன் பிண்டாரு (Ioan Pintaru) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி Old Bailey நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.