;
Athirady Tamil News

பிரித்தானிய சிறைச்சாலையில் அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்: கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் நபர்!

0

பிரித்தானிய சிறையில் பொலிஸ் அதிகாரியை கொலை செய்ய முயற்சித்த நபர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி மீது கொலை முயற்சி தாக்குதல்
பிரித்தானியாவின் டர்ஹாம்(Durham) கவுண்டியில் உள்ள பிராங்க்லாண்ட் சிறையில்(Frankland Prison) கிரேட்டர் மான்செஸ்டர் காவல் துறையின் துப்பறியும் அதிகாரி, சிறைவாசி ஒருவரால் மார்பில் குத்தப்பட்டார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி, தற்போது வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருவதாக டர்ஹாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் தொடர்புடைய 62 வயது டேவிட் டெய்லர்(David Taylor) தற்போது காவலில் வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.