;
Athirady Tamil News

யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நேசராசா பனுசா என்ற பெண்ணே நேற்று(16) உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 11ஆம் திகதி உயிரிழந்த பெண் பொன்னாலை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

கீழே விழுந்து உயிரிழப்பு
இதனையடுத்து, தனது சகோதரனுடன் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை மாதகல் – பொன்னாலை வீதியில் குறித்த பெண் தவறி திடீரென கீழே விழுந்து மயக்கம் அடைந்துள்ளார்.

சங்கானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(16) உயிரிழந்துள்ளார்.

அத்துடன், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.