;
Athirady Tamil News

எடை குறைப்பு, முடி உதிர்வதைத் தடுக்கும் பாலைவனப் பழங்கள்: ஒரு மாதம் மட்டுமே கிடைக்கும்

0

பாலைவன பழங்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன. இது ஒன்று முதல் ஒன்றரை மாதங்களில் மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வரும். எனவே உங்களால் முடிந்தவரை அந்த காலக்கட்டத்திற்குள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதனையடுத்து இது அடுத்த ஆண்டு மட்டுமே கிடைக்கும். இந்த பழம் பார்ப்பதற்கு அழகாக இருப்பது போல், அதில் சிறப்பம்சங்களும் நிறைந்திருக்கின்றன. கர்ப்பிணிகள் பொருத்தவரை, பிரசவம் நடைபெறுவதற்கு 4 வாரத்திற்கு முன்பிருந்து தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். மேலும் பேரிச்சம் பழத்தை கர்ப்பகாலத்தில் சாப்பிட்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

இது ஒரு பாலைவனப் பழம் மற்றும் இந்த பருவத்தில் ஆண்டுக்கு ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களுக்கு மட்டுமே சந்தையில் விற்பனைக்கு வரும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்க கூடியதாகும். குறிப்பாக, பெண்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெறும் வயிற்றில் இந்த பாலைவனப் பழத்தை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் இந்தப் பழத்தின் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. எனவே இந்த பாலைவன பழங்களானது பிகானரில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சீசனில் 100 குவிண்டால் பேரீச்சம்பழம் : ஜுன்ஜுனு ரயில் நிலையம் அருகே பேரிச்சம்பழம் விற்றுக் கொண்டிருந்த லாலராம் கூறியதாவது, கடந்த ஐந்து முதல் ஆறு வருடங்களாக பேரிச்சம்பழம் விற்பனை செய்து வருகிறேன். தற்போது ஒரு கிலோ ரூ.120 என்ற விலையில் இந்த பாலைவன பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இந்த சீசனில் 5 முதல் 6 கார்ட் லோடு பேரிச்சம்பழங்களை விற்பனை செய்வோம். தற்போது பேரிச்சம்பழம் சீசன் ஆரம்பமாகிவிட்டது, இது ஒன்றரை மாதங்கள் மட்டுமே நீடிக்கும். ஒரு சீசனில் சுமார் 100 குவிண்டால் கச்சா பேரீச்சம்பழங்களை விற்பனை செய்வோம் என்று கூறியுள்ளார்.

எடை இழப்பு மற்றும் முடி உதிர்வை தடுக்க உதவுகிறது

பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்துகள் குறித்து, மகப்பேறு மருத்துவர் ஹேம்லதா டாக்கா கூறியதாவது, பேரீச்சம்பழம் வைட்டமின்களின் சுரங்கம். எடையைக் குறைக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும், நார்மல் டெலிவரி ஆகவும் பேரிச்சம்பழம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்று டாக்டர் ஹேம்லதா தெரிவித்துள்ளார். பச்சை பேரீச்சம்பழம் நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்துக்கான சிறந்த பழமாகும் என்றும் அவர் கூறினார். இது குடலை பலப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. பேரிச்சம்பழத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மேலும், இதயம் தொடர்பான நோய்களும் குறையும் என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.