;
Athirady Tamil News

வவுனியா உதயன் பத்திரிகை ஊடகவியலாளர் மீது தாக்குதல்: பெண் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் முயற்சி

0

வவுனியா மாவட்டத்தில் உதயன் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றதுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில நாட்களாக வவுனியா ஊடக அமையம் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பாக முகநூலில் அவதூறு பரப்பிவரும் சம்பவம் தொடர்பாக சுமூகமான தீர்வு ஒன்றை எட்டுவதற்காக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் குடியிருப்பு பூங்காவில் பொதுக்கூட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் அவதூறு பரப்பிய நபரும் கலந்து கொண்டிருந்தார்

இதன்போது வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றபோது திடீரென உணச்சிவசப்பட்ட, டான் ரீவி, மற்றும் ரூபவாஹினி , வசந்தம் டீவி ஆகிய ஊடகங்களுக்கு பணியாற்றும் நபர் உதயன் பத்திரிகை ஊடகவியலாளர் மீது ஹெல்மெட் கொண்டு தாக்குதல் நடத்தியதில் உதயன் பத்திரிகை ஊடகவியலாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அங்கிருந்த பெண் ஊடகவியராளரையும் தள்ளி வீழ்த்தியதுடன் அவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளையில் அருகில் இருந்த ஊடகவியலாளர்களால் தடுக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதலை மேற்கொண்ட நபரே ஊடகவியலாளர் மீதும் ஊடக அமையம் மீதும் முகநூலில் அவதூறு பரப்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.