;
Athirady Tamil News

குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியான அறிவிப்பு

0

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை
இதனடிப்படையில், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 215 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ வெள்ளை சீனி 247 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ பருப்பு 278 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 441 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 785 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி 90 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ பாசிப்பயறு 92 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.