;
Athirady Tamil News

கலிஃபோர்னியாவில் இருவருக்கு நேர்ந்த துயரம்

0

அமெரிக்க மாகாணம் கலிஃபோர்னியாவில் இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நாளுக்குநாள் அங்கு பல நகரங்களில் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கலிஃபோர்னியா மாகாணம் கிழக்கு Oakland-யின் Webster பகுதியில் சனிக்கிழமையன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

இருவர் பலி
யாரோ ஒருவர் ஒரு குழு மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் பட்டியலிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தப்பியோடிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.