;
Athirady Tamil News

யாழில். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு

0

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் . ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த சின்னையா இரத்தினசிங்கம் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி வீட்டில் இருந்து திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வேளை , எதிரே வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளானதில் முதியவர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று , கடந்த 03ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை திடீரென சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.