;
Athirady Tamil News

நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படும்: ஜனாதிபதி வேட்பாளரின் அறிவிப்பு

0

தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் (srilanka) எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

முழுமையான மறு ஆய்வு நடத்தி அதன்படி எரிபொருள் விலையை குறைக்க முடியும் என்றும் அநுரகுமார உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) பிரச்சார கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முழுமையான மறு ஆய்வு
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் 3 பில்லியன் டொலர் கடனைக் கொண்டிருந்ததாகவும், அதனை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

இதன் விளைவாக, இந்தக் கடனை அடைக்க ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் கிட்டத்தட்ட முழுமையாக செலுத்தப்பட்டாலும், லிற்றருக்கு 50 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து பொதுமக்களுக்கு சுமையாக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு முழுமையான மறு ஆய்வு நடத்தி, அதன்படி எரிபொருள் விலையை குறைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.