;
Athirady Tamil News

அம்பானி குடும்பத்தின் புதிய மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கும் நீதா அம்பானி – விலையை கேட்டால் தலையே சுற்றும்..

0

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Limited) உரிமையாளரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகாவிற்கு நீதா அம்பானி பல விலையுயர்ந்த பொருட்களை வழங்கி வருகிறார்.

அம்பானி குடும்பத்தின் புதிய மருமகள்
நீடா மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ஜூலை 12, 2024 அன்று ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த ஜோடி குஜராத்தின் ஜாம்நகரில் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வை ஆடம்பரமாகக் கொண்டாடியது.

குறித்த விழாவில் வணிக மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.

இவர்களது நிச்சயதார்த்தம் 2022ல் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடந்தது.

இந்நிலையில் தனது அன்பு மருமகளுக்கு நீதா அம்பானி வழங்கிய முத்து மற்றும் வைர சோக்கர் நெக்லஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விலையுயர்ந்த பரிசு வழங்கும் நீதா அம்பானி
நீதா அம்பானி வழங்கிய விலையுயர்ந்த நெக்லஸை 2022 ஆம் ஆண்டு ராதிகா அணிந்திருந்தார்.

மேலும் அதன் விலை கோடிகளை தாண்டும் என அறிக்கைகளால் கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்காக பாம் ஜுமைராவில் ஒரு ஆடம்பரமான மாளிகையை பரிசாக வழங்கினார்.

துபாயின் மேல்தட்டு சுற்றுப்புறங்களில் ஒன்றில் அமைந்துள்ள இந்த ஆடம்பரமான சொத்து 3000 சதுர அடியில் உள்ளது.

10 படுக்கையறைகள் மற்றும் 70 மீட்டர் நீளமுள்ள ஒரு தனியார் கடற்கரையும் காணப்படுகிறது.

இதற்கிடையில், பிரம்மாண்டமான திருமணத்திற்குப் பிறகு, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக நீதா அம்பானி, முகேஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமல் ஆகியோருடன் பாரிஸ் சென்றனர்.

விளையாட்டுகளில் கலந்துகொள்வதைத் தவிர, புதுமணத் தம்பதிகள் குடும்பத்துடன் Disneyland சென்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.