;
Athirady Tamil News

கிளப் வசந்த கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேககநபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பெண் உட்பட 11 சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியல் நீடிப்பு

அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இன்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.