;
Athirady Tamil News

அம்பாறையில் யானையின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

அம்பாறை (Ampara) – நிந்தவூர் (Nintavur) காவல்துறை பிரிவிற்குட்பட்ட வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று அதிகாலை அல்லிமூலை – மல்கம்பட்டி பிரதேசத்தில் (2024.08.20) இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் நிந்தவூர் 21ஆம் பிரிவைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய ஆதம்பாவா நவாசிம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மணல் அகழ்வு வேலைக்கு செல்லும் போதே யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை (Sammanthurai) நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம், அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடைக் காலம் என்பதால் யானைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.