;
Athirady Tamil News

சிலாபத்தில் 4 நவீன பேருந்துகளுக்கு தீ வைப்பு

0

சிலாபம் வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

அருகில் இருந்த சிசிடிவி கெமராவை சோதனையிட்ட போது, ​​சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளது

இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.