;
Athirady Tamil News

ரணிலுக்கான ஆதரவை நிராகரித்துள்ள ஹரீஸ் எம்பி

0

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.M.M. Harees) ஆதரவளிப்பதாக போலியான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் ஊடகப்பிரிவு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கட்சி தீர்மானங்களை மீறி எவ்வித முடிவுகளையும் எடுக்காதவராக தொடர்ந்தும் அக்கட்சி உறுப்பினராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது பணிகளை சமூக அக்கறையுடன் முன்னெடுத்து செல்வார் என பொறுப்புடன் தெரிவித்து கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து இடைநிறுத்தம்
இந்த நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உச்ச பீட உறுப்புரிமையிலிருந்தும் எச்.எம்.எம்.ஹரீஸ் (H. M. M. Harees) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வெற்றி பெறுவதற்கு பிரசாரம் செய்ய கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையச் செயற்படத் தவறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.