;
Athirady Tamil News

காங்கேசன்துறை மாங்கொல்லை ஞானவைரவர் மஹா கும்பாபிஷேகம்

0

யாழ் வலிவடக்கு, காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேக நிகழ்வுகளை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை காலை 5:30 மணியளவில் விநாயக வழிபாட்டோடு கிரியைகள் ஆரம்பமானது.

நாளைய தினம் (22) காலை 8:00 மணி முதல் விநாயக வழிபாட்டோடு விஷேட சாந்தி பூஜைகளை தொடர்ந்து எண்ணெய் சாத்தும் நிகழ்வு மாலை 4:00 மணிவரை இடம்பெறும். இதனைத்தொடர்ந்து மறுநாள் (23) காலை 5:30 மணிமுதல் விநாயக வழிபாட்டோடு மஹா கும்பாபிஷேக பூஜைகள் ஆரம்பமாக உள்ளதால் அடியவர்கள் சமய விழுமியங்களோடு வருகை தந்து வைரவபெருமான் திருவருளை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 12 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மேலும் குறித்த மாங்கொல்லை பிரதேசமானது 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து , கடந்தவருட நடுப்பகுதியில் ஆலய சூழலையும், அதனை அண்டிய சில குறித்த பிரதேசங்களையும் விட்டு இராணுவத்தினர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.