;
Athirady Tamil News

இந்திய றோட்றி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் இன்று (22) மரக்கன்றுகள் நடப்பட்டது

0

இந்திய றோட்றி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் இன்று (22) மரக்கன்றுகள் நடப்பட்டது.

இன்று (22) பிற்பகல் தெல்லிப்பளை பலாலி வீதியில் உள்ள மயிலிட்டி தெற்கு கட்டுவன் பகுதியில் வீதி ஓரத்தில் நிழல் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தனவந்திரி செயற்திட்டத்தின் தலைவர் றோட்டேரியன் தனசேகர் தலைமையில், சுன்னாகம் பாரிய றோட்டறி கழகம், இந்திய றோட்றி கழக அங்கத்துவர்கள், க்றீன் லேயர் அமைப்பு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர், சுன்னாகம் பாரம்பரிய றோட்றி கழகம் மற்றும் யாழ்பப்பாண கழகங்களின் ஊடாக தெரிவு செயயப்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றித்திறனாளிகளுக்கும் உதவி திட்டங்கள் வழங்கப்பவுள்ளது.

யாழ்ப்பாணம் மட்டுமல்லாது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களுக்கும் உதவி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.