;
Athirady Tamil News

எங்களை அனுப்பியது மகிந்த தான்! நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படை

0

எங்களை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறியவர் மகிந்த ராஜபச்சவே என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்

அத்துடன், மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது, “அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார்கள்.

கடும் கோரிக்கை

நாமலுக்கு இது சரியான நேரமல்ல என மகிந்த ராஜபக்ச தெளிவாக தெரிவித்தார். என்றாலும் நாமலின் கடும் கோரிக்கை காரணமாக அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றும் மகிந்த ராஜபக்ச அவரது மனசாட்சிக்கு உட்பட்டு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) போட்டியிட வேண்டும் என்றே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.