;
Athirady Tamil News

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான முக்கிய குற்றவாளி சிவராமன் உயிரிழப்பு…

0

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சிவராமன் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்சிசி முகாம் நடத்தி, நாதக முன்னாள் நிர்வாகி சிவா என்ற சிவராமன் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சிவராமனை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, தப்பி ஓட முயன்றபோது காலில் அடிபட்டதால் மருத்துவமனையில் சிவராமன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, கைதுக்கு முன்பே, காவல்துறை விசாரணைக்கு அஞ்சி, கடந்த 16 மற்றும் 18 ஆம் தேதிகளில் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக சிகிச்சையின் போது சிவராமன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இதனையடுத்து சிவராமனுக்கு முதலில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிவராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல கடந்த மாதமும் குடும்ப பிரச்சினை காரணமாக எலி மருந்து சாப்பிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.