;
Athirady Tamil News

இலங்கையில் முதன்முறை… ரயில்வே பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

0

நாட்டில் முதன் முறையாக ரயில்வே பயணிகளுக்கு இணையவழியில் பயணச்சீட்டு வழங்கும் புதிய இணையத்தள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, www.pravesha.lk என்ற இணையத்தளத்தையே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க,

குறுகிய தூரம் பயணிக்கும் ரயில் பயணிகள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றார்.

முதற்கட்டமாக சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இணைக்கப்பட மாட்டார்கள் என்றும், ஆனால் எதிர்காலத்தில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.