;
Athirady Tamil News

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(Ratnayake) தெரிவித்தார்.

இந்த வாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முடிவு குறித்து முதலில் கலந்துரையாடப்படும் என்று நம்புகிறோம் என்றார்.

இதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.

திறைசேரிக்கு திருப்பி செலுத்தப்பட்ட பணம்
கடந்த ஆண்டு (2023) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமானதால், தேர்தலுக்காகச் செலவழிக்கப்பட்ட பணம் தவிர மற்ற அனைத்தும் திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் பெறுவது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரங்கள் அனைத்திலும் நுழைவதற்கு முன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விடயங்களை ஆணையம் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறினார்.

அச்சிடப்பட்ட ஒரு தொகுதி வாக்கு சீட்டுக்கள்
கடந்த வருடம் (2023) மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் வாக்குச் சீட்டுகளின் ஒரு பகுதி அச்சிடப்பட்டு கையிருப்பு வைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது. அச்சிடப்படாத வாக்குச் சீட்டுகளின் மீதி தொகையை அச்சிட முடியும் என்றும் தலைவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் நாட்டை விட்டு வெளியேறியமை, சிலர் உயிரிழந்துள்ளமை, சிலர் அரசியலை கைவிட்டமை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஆலோசனை நடத்துவது மற்றும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய வேட்புமனுக்கள் கோரப்பட்டால், நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.