;
Athirady Tamil News

இலங்கையில் மற்றுமொரு புதிய விமான சேவை: முக்கிய கலந்துரையாடலில் உயரடுக்கு குழுக்கள்

0

இலங்கை வர்த்தகர் ஒருவரால் “Air Ceilao” என்ற பெயரில் மற்றுமொரு விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து பின்னர் ஐரோப்பாவுக்கான விமான சேவையை ஆரம்பிப்பதே இவர்களின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான நிறுவனத்தை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகள் சிவில் விமான சேவை அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சி

இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு விரிவடைந்து வருவதால், இந்த விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

“விமானப் போக்குவரத்து துறையில் விரிவான அனுபவமுள்ள உயரடுக்கு குழுவை கூட்டி இது தொடரடபான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.