;
Athirady Tamil News

இரத்து செய்யப்படும் சில அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவித்தல்

0

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவல்களை பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe ) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.