;
Athirady Tamil News

பருத்தித்துறையில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 11 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த 11 கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் ஊடாக கடற்படையினர் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.