;
Athirady Tamil News

ரணிலுக்கு ஆதரவளிக்க வெளிநாடுகளில் கைமாறும் பெருந்தொகை பணம் : அம்பலப்படுத்தும் எம்.பி

0

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவுக்கு(thalatha athukorale) அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasri jayasekara) தெரிவித்துள்ளார்.

இந்தப் பணம் சிங்கப்பூரில்(singapore) அவருக்கு செலுத்தப்பட்டதாகவும், பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் காலையில் சிங்கப்பூர் சென்று மாலையில் நாட்டுக்குத் திரும்பியதாகவும் கூறினார்.

தாய்லாந்து சென்றுள்ள மேலும் இரண்டு எம்.பிக்கள்

பணப் பரிவர்த்தனைக்காக மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்லாந்துக்கு(thailand) ஏற்கனவே சென்றுள்ளதாகவும், அவர்கள் பரிவர்த்தனையை முடித்தவுடன் ரணில் விக்ரமசிங்கவுடன்(ranil wickremesinghe) இணைந்து அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் விசா பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் பணம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.