;
Athirady Tamil News

நீராடச் சென்ற தாயும், இரு மகன்களும் மாயம்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

கம்பஹா – போகமுவ பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 36 வயதுடைய தாயும் அவரது இரண்டு மகன்களும் காணாமல் போயுள்ளனர்.

இன்றையதினம் (25-08-2024) மதியம் போகமுவ பகுதியலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இவர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 வயது மற்றும் 5 வயதுடைய இரண்டு மகன்களுமே இச் சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.

இவர்கள் பெரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தாயையும் மற்றைய மகனும் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.