;
Athirady Tamil News

திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது! திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு

0

திருகோணமலையில் உள்ள ஆறாம் கட்டை சாம்பல்தீவு பகுதியில் உள்ள உலக மீட்பர் திருச்சபையில் ஆராதனையை முன்னெடுக்க கூடாது என திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

இதன்படி, இன்றையதினம் (25-08-2024) ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் குறித்த தேவாலயத்திற்கு முன் வீதியில் ஆராதனையில் ஈடுபட்டனர்.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி என நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு திருச்சபை மண்டபத்திற்குள் நுழைவதற்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரதான போதகர் சிவா இமானுவேல் தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கட்டடம் அமைத்து பல ஆண்டுகளாக சுமார் 100 அங்கத்தவர்களுடன் வழிபாட்டில் ஈடுபடுகிறோம். இன்று எமது மத சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

சுதந்திரமாக மத வழிபாடுகளில் ஈடுபடவும் எமது ஆராதனைகளை மேற்கொள்ளவும் உடனடியாக வழி வகை செய்து தாருங்கள் எனவும் பிரதான போதகர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆராதனையில் ஈடுபட வந்த மக்கள் வீதி அருகில் மதக்கடமைகளை நிறைவேற்றினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.