;
Athirady Tamil News

சூப் குடித்து உயிரிழந்த நபர் – திடுக்கிடும் வெளியான தகவல்!

0

நண்பர்களுடன் சூப் குடித்துவிட்டு வீடு திரும்பிய நபர் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் முகந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். 49 வயதான இவர் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய போது தனது நண்பர்களுடன் தொழிற்சாலை அருகில் உள்ள சூப் கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது செல்லும் வழியில் திடீரென சரவணன் சாலையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள், உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாரடைப்பு
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சரவணன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சரவணனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சூப் குடித்துவிட்டு வீடு திரும்பிய நபர் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.