;
Athirady Tamil News

யாழில். பசுமாடு திருடிய இருவர் கைது

0

வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட சுமார் 05 இலட்ச ரூபாய் பெறுமதியான பசு மாடு ஒன்று திருட்டு போயிருந்தது

அது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் , சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அச்செழு பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தன் அடிப்படையில் திருடப்பட்ட பசு மாடு மீட்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.