;
Athirady Tamil News

நான் அறைக்கு செல்லும் போதே அந்த பெண் உயிரோடு இல்லை – கொல்கத்தா குற்றவாளி திடுக் தகவல்!

0

கொல்கத்தா கொலை குற்றவாளி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா வழக்கு
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி சஞ்சய் ராய் மட்டும்தான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று சி.பி.ஐ நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உண்மை கண்டறியும் சோதனை
இதனையடுத்து, சஞ்சய் ராய் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கொல்கத்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சோதனையில், நான் அறைக்கு செல்லும் போதே அந்த பெண் உயிரோடு இல்லை.

பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே இறந்து கிடந்தாள் எனக் கூறியதாக கூறப்படுகிறது. பொய் கண்டறிதல் சோதனையில் பல தவறான மற்றும் நம்பமுடியாத பதில்களை அளித்துள்ளார். மேலும், சஞ்சய் ராய் பதற்றமாகவும் கவலையுடனும் காணப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக சஞ்சய் ராய் அளித்த வாக்குமூலத்தில், நான் மட்டும்தான் குற்றத்தை தனியாக செய்தேன். நான்தான் குற்றவாளி. நான் செய்ததை சரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நான்தான் தவறு செய்தேன்.. என்னை தூக்கில் போடுங்கள். என்னை தூக்கில் போட்டாலும் தவறுன்னு சொல்ல மாட்டேன். எனக்கு பிரச்சனை இல்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.