;
Athirady Tamil News

முதலில் வருவோருக்கு முன்னுரிமை!

0

இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது இணையவழியில் முன்பதிவு செய்து திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கும் நடைமுறை நாளை (28) முதல் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேவை வழங்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.